வெள்ளி, 3 டிசம்பர், 2010

செய்திகள் - செப்டம்பர் 16, 2010

இன்றைய சிந்தனை:

Quotes for the day:

இன்று சர்வதேச ஜனநாயக தினமாக ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

இன்றைய வீடியோ:

முக்கிய செய்திகள் 15 செப்டம்பர் 2010:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கலவரங்களை அடக்கும் முகமாக அரசியல் தீர்வு காண அம்மாநிலத்தில் ராணுவத்துக்கு அளிக்கப் பட்டு வரும் விசேஷ அதிகாரத்தை சில இடங்களில் நீக்குவது மற்றும் பிற செயல்பாடுகளைக் குறித்து பிரதமர் இல்லத்தில் கூடிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அனைத்துக் கட்சிக் குழு ஒன்று அம்மாநிலத்துக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்த பின்னர் எந்த முடிவும் எடுப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் சீன மொழி அறிமுகப்படுத்தப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சென்னை இந்தியன் தொழில்நுட்பக் கல்லூரியில் சீனமொழிப் பயிலகம் அமைக்கப்பட உள்ளது.

57ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அமிதாப் பச்சன் அவர் நடித்த "பா" எனும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றார். அமீர் கான் நடித்த "மூன்று முட்டாள்கள்" எனும் திரைப்படம் மிகவும் பிரபலமான படம் என்று தீர்மானிக்கப் பட்டது. இசை ஞானி இளையராஜா சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதை "கேரள வர்ம பழசி ராஜா" என்ற மலையாளப் படத்துக்காகப் பெற்றார்.

ஆந்திரப்ரதேசத்தில் தெலிங்கானா மாகாணத்தைச் சேர்ந்த வக்கீல்களுக்கு அரசு பதவிகளில் 42% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி கலவரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு

13 ஆயுள் கைதிகள் பேரரிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாளுக்கு முதல் நாள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வடகிழக்குப் பருவக்காற்று வரவிருக்கும் நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் பல சென்னை நகரின் இன்னும் மூடப்படாமல் உள்ளன.

சென்னையில் புதிய கண் நோய் பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

செய்திகள் செப்டம்பர் 15, 2010

தினம் ஒரு சிந்தனை - இன்றைய சிந்தனை - உறவுகள் - தமிழ்த்தேனீ

QUOTES FOR TODAY - by Cheenu Uncle


இன்றைய இந்தியன் தமாஷா: காமன்வெல்த் விளையாட்டுக்கள்


இந்திய மக்களுக்கான முக்கியச் செய்திகள் - ஆகிரா


ஞாயிறு, 28 நவம்பர், 2010

செய்திகள்: செப்டம்பர் 14, 2010

இன்றைய செய்திகள் செப்டம்பர் 14 2010

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பிரிவினைவாத சக்திகளால் தூண்டிவிடப்பட்டு நடந்து வரும் கலவரங்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்கில் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் வேண்டுகோளின் படி மாநிலத்தில் ராணுவத்திற்கு அளித்திருக்கும் Armed Forces Special Powers Act எனும் விசேஷ அதிகாரத்தையளிக்கும் சட்டத்தைக் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் விலக்குவது குறித்து முடிவெடுக்க
மத்திய அரசு நாளை செப்டம்பர் 15 புதன் கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

http://www.peopleofindia.net/politics/video/20100914-01_JKall-party-meet.php

மல்யுத்தப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வெற்ற இந்திய வீரர் இந்தியா திரும்பினார். அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

After conquering the world, Indian wrestler Sushil Kumar received a hero's welcome as he returned to Delhi late Monday (September 13) night. Hundreds of fans and supporters thronged New Delhi's Indira Gandhi International Airport as Sushil Kumar arrived in India.

http://www.peopleofindia.net/news/video/sports/20100913-01_sushilkumar-wrestling.php

http://www.peopleofindia.net/news/video/sports/20100914-01_welcome-sushilkumar-wrestler.php

வீரரான சுசீல் குமாருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்த இடத்தில் அவருக்கு விருது வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் (இவர் முன்னாளைய தேர்தல் ஆணையராக இருந்தவர்) சுசீல் குமாருக்கு 13 வருடங்களாகப் பயிற்சியளித்து அவர் இன்று சாம்பியனாக உயரும் நிலைக்குக் காரணமான அவரது குருவான பயிற்சியாளர் சத்பால் சிங் என்பவரைப் புகைப்படம் எடுக்க இருக்கும் இடத்திலிருந்து கையால் தள்ளியது அங்கு குழுமியிருந்த பலராலும் அவமரியாதையாகக் கருதி வருந்த நேர்ந்தது. சத்பால் சிங் துரோணாச்சாரியார் விருது பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தவறுக்கு அங்கே நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதற்கு எம்.எஸ். கில் தான் பதிலளிக்கத் தேவையில்லை என்று மிகவும் அலட்சியத்துடன் தெரிவித்து விட்டு அங்கிருந்து
அகன்றது இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற மரியாதை தவறிய முறைகேடான நடத்தைக்கு உதாரணமாக விளங்கியது.

In an apparent snub to Dronacharya awardee wrestling coach Satpal Singh, Sports Minister MS Gill asked him to step aside during a photo opportunity with World Championship gold medallist wrestler Sushil Kumar at his residence in New Delhi on Tuesday (September 14).

http://www.peopleofindia.net/politics/video/20100914-02_ms-gill-sushilkumar.php

மேற்கு வங்காளத்தில் சென்ற ஜூலை மாதம் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதியே காரணம் என்ற ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியின் வாதத்தை ரயில்வே பாதுகாப்புத் துறை கமிஷணர் தாக்கல் செய்த ஆரம்ப நிலை அறிக்கை மறுத்துள்ளது.

http://www.peopleofindia.net/politics/video/20100722-01_bengal-train-accident.php

Dashing the Union Railway Minister Mamata Banerjee's hopes of a conspiracy behind the Sainthia train collision, the preliminary report of the Commissioner of Rail Safety, Eastern Circle, has squarely put the blame on the train crew. The accident involving two trains which claimed 66 lives in West Bengal's Sainthia station July this year, was caused by the "failure" of railway staff, according to a preliminary inquiry report by the Commissioner of Railway Safety.

http://www.timesnow.tv/Mamatas-conspiracy-theory-rubbished/videoshow/4353807.cms

அனைவரின் சந்தேகத்துக்கிடமான இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) எனும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு அமைப்பின் தலைமை அதிகாரியாக (CEO) இருக்கும் லலித் மோதியின் மோசடிகள் அனைத்தும் அம்பலமாகத் துவங்கியுள்ளன. அவரது கூட்டாளியாக இருந்த சுந்தரராமன் வெளிப்படுத்தத் தயாராகிறார்.

http://www.peopleofindia.net/news/video/sports/20100425-01_ipl-lalit-modi.php

Indian Premier League (IPL) Chief Executive Officer Sundar Raman has flown down from South Africa to India specially to depose in a hearing against suspended IPL Chairman Lalit Modi as Board of Control for Cricket in India (BCCI) witness during the Disciplinary Committee meeting. Sources told TIMES NOW Lalit Modi’s close aide during his tenure have already handed over damning evidence against the suspended IPL chairman. The IPL CEO along with 3 IMG officials has given strong evidence to BCCI’s disciplinary committee. The 3 member disciplinary panel is to meet in New Delhi on Tuesday (September 14).

http://www.timesnow.tv/Damning-proof-against-Modi/videoshow/4353851.cms

பிலாஸ்பூர் நகரில் சல்மான் கான் ஊழல் புரியும் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்துள்ள டபாங் எனும் புதிய ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற டி.எஸ்.பி. ஒருவரை சினிமா தியேட்டரிலிருந்த ஒரு தியேட்டர் காவலர் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காகத் தள்ளியதை டி.எஸ்.பி.யுடன் வந்த போலீஸ்காரர்கள் அடித்தே கொன்றுள்ளனர்.

A group of policemen beat a private security guard to death at a Bilaspur cinema, allegedly after he pushed the district superintendent of police after failing to recognise him in a show-change melee. The incident occurred at a theatre screening the latest Bollywood hit Dabangg, in which Salman Khan plays a corrupt, but Robin Hood-like
policeman.

http://www.indianexpress.com/news/cops-beat-cinema-guard-to-death-for-pushing-sp/681257/

செய்திகள்: செப்டம்பர் 13, 2010

இன்றைய செய்திகள்செப்டம்பர் 13, 2010

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் கலவரத்தை அடக்கி அமைதியை நிலை நாட்டவும் இந்திய ராணுவத்திற்கு விசேஷமான அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் Armed Forces Special Powers Act (AFSPA) ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் வேண்டுகோளின் படி மாநிலத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நீக்கப்பட்டது. இந்த முடிவு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் பாரதப் பிரதமரும் கலந்தாலோசித்த பின்னர் நேற்று (செப்டம்பர் 11, 2010) எடுக்கப்பட்டது. இது குறித்து நேற்று ஈகைத் திருநாளைக் கொண்டாடும் நிமித்தமான தொழுகை முடிந்த பின்னர் தங்களது மறுப்பை அமைதியான முறையில் தெரிவிக்க மாநில அரசின் அனுமதியை வேண்டிப் பெற்ற பிரிவினைவாதிகள் தங்களது வாக்குறிதியை மீறி காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்களுக்குத் தீ வைத்துப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.


இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கொக்லி எனும் அதிகாரி Shaurya Chakra எனும் மூன்றாவது உயர்நிலை பதக்கத்தைப் பெற்ற இரண்டே மாதங்களுக்குப் பின்னர் April 30, 2006 அன்று சந்தேகத்துக்கிடமான விதத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து மரணமடைந்தார். அவர் சமீபத்தில் திருமணம் புரிந்து கொண்ட பின்னர் மணவாழ்வில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்ததை அவரது தாயார் ஏற்க மறுத்துத் தன் மகனது மரணத்துக்குக் காரணமானவர்களை தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இத்தனை காலமும் மௌனம் காத்துவந்த இறந்த கேப்டனின் மனைவியும் தன் மாமியாரின் இவ்வேண்டுகோளை தானும் வற்புறுத்தியுள்ளார்.


உலகப் பணக்காரர்களில் 4ஆவது இடத்தில் தற்போது இருக்கும் முகேஷ் அம்பானி வரும் 2014ஆம் ஆண்டு உலகில் முதல் பணக்காரராகக் கூடும் என ஃபோர்பெஸ் எனும் பத்திரிக்கை குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டு கணித்து வெளியிட்டுள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிலர் லண்டன் நகரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறச் சென்ற இடத்தில் அங்குள்ள கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டிடம் பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆட்டத்தில் முறைகேடுகள் செய்துள்ளதை லண்டன் நகரில் செயல்படும் நியூஸ் வொர்ல்ட் எனும் ஒரு பத்திரிக்கை வீடியோ காட்சிகளின் மூலம் வெளியிட்டது. 




இதனைத் தொடர்ந்து எழுந்த குற்றச் சாட்டுகள், விசாரணைகள் மற்றும் மறுப்புகள் எனும் தொடர் நாடகங்களைத் தொடர்ந்து தற்போது இத்தகைய கிரிக்கெட். சூதாட்டத்தில் மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மத்திய அமைச்சர் ஷரத் பாவார் தலைமை வகிக்கும் அகில உலக கிரிக்கெட் அமைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே சந்தேகம் கொண்டிருந்தாலும் இவ்விஷயத்தில் எவ்வித செயல்பாடும் மேற்கொள்ளாத நிலை பல கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.


ஆஜ்மீர் நகரத்தில் மசூதியாக இருந்த ஆறு மாடிக் கட்டிடன் இன்று தானே இடிந்து விழுந்து தரைமட்டமானது. இக்கட்டடம் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதென அதிகாரிகள் முன்னரே அறிவித்திருந்த காரணத்தால் அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை.


பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் எனுமிடத்தில் சைனாவின் ராணுவம் தனது வீரர்களை நிறுத்திய்ள்ளது. இது குறித்து இந்திய அரசு சீன அரசிடம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது. 


இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.  


புதன், 6 அக்டோபர், 2010

செய்திகள்

இன்றைய செய்திகள் - செப்டம்பர் 11, 2010

மஹாகவி பாரதியார் நினைவு தினம் 

(டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள்

ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை

இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் அருளட்டும். 

விநாயக சதுர்த்தி 

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. 


2001ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர். 


இந்திய-பாகிஸ்தான் இணை டென்னிஸ் வீரர்கள் ரோஹன் போபன்னா, ஐசம் உல் ஹக் குரெஷி (Indo-Pak pair of Rohan Bopanna and Aisam-ul-Haq Qureshi) ஆகியோர் இருவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தனர். இருப்பினும் இந்திய பாகிஸ்தான் மக்களிடையே எவ்வித விரோத மனப்பான்மையும் இல்லை எனும் உண்மையை உலகறியச் செய்துள்ள இவர்களது ஒன்றுபட்ட முயற்சியும் சாதனையும் உலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்படுகின்றன. 


மேலும்: